குசல் மெண்டிஸ் நீதிமன்றில் முன்னிலை

விபத்துச் சம்பவமொன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்று (05)  அதிகாலை, பாணந்துறை வடக்கு – ஹொரேதுடுவ பிரதேசத்தில், பழைய காலி வீதியில்  இடம்பெற்ற விபத்துச் சம்பவத்திலேயே, குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீதியில் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது, குசல் மெண்டிஸ் பயணித்த கார் மோதியுள்ளது.

இவ்விபத்தின்போது, சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை வடக்கு –கொரகபொல பிரதேசத்தைச் சேர்ந்த பஸ் நடத்துனர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  


Add new comment

Or log in with...