பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்கள் எனக்கு வாக்களிக்கவும். ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது அமரர் ரவிராஜினுடைய மனைவியருக்கும் வாக்களிக்கும்படி கேட்டு கொள்கிறேன். தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லும் எண்ணம் எனக்கில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்,

அமரர் ரவிராஜினுடைய மனைவி சசிகலாவின் அரசியல் பிரவேசத்தை நான் வரவேற்கின்றேன்.

அவருடைய கணவனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன. 

அதனால் சசிகலா மன அழுத்தத்திற்க்கு ஆளாகியுள்ளார்.

சசிகலா தான் பிரதிநித்துவப்படுத்தும் கட்சியின் ஊடாக பாராளுமன்றம் செல்ல வேண்டும்.

பெண்கள் எனக்கு கட்டாயம்  வாக்களிக்கவும். ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது அமரர் ரவிராஜினுடைய மனைவிக்கும் வாக்களிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

ஏனெனில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...