சுற்றிவளைப்புகளில் 2,165 பேர் கைது

கடந்த 02ஆம் திகதி இரவு 12.00 மணி முதல்,  நேற்றிரவு (03) 12.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, 2,165 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்ட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 480 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த 800 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 221 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 224 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 424 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்புகளில் ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் 05 உம், கைக்குண்டு 01 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, 4,580 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...