மேலும் 6 கடற்படையினர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 06 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (01) வெளியேறியுள்ளனர்.

இக்கடற்படையினரில் 04 பேர் இரணவில வைத்தியசாலையிலும், 02 பேர் தெல்தெனிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் மேலும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று குறித்த 06 பேரும் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 848ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...