29ஆவது முறையாக மகுடம் சூடியது பேயர்ன் முனிச் அணி

ஜேர்மனியில் நடைபெறும் உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையிலான பன்டெஸ்லிகா கால்பந்து தொடரில், 29ஆவது முறையாக பேயர்ன் முனிச் அணி மகுடம் சூடியுள்ளது.

2019--20 ஆண்டு பருவக்காலத்துக்கான தொடரில், ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிச் அணி, தனது இறுதி லீக் போட்டியில், வொல்ஃப்ஸ்பர்க் அணியை 0- -4 என பந்தாடி வெற்றியுடன் சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டது.

நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிச் அணி, பன்டெஸ்லிகா கால்பந்து தொடரில், தொடர்ச்சியாக 8ஆவது முறையாக பெற்ற சம்பியன் பட்டமும் இதுவாகும்.

பேயர்ன் முனிச் அணி நடப்பு தொடரில், புள்ளிப்பட்டியலில 34போட்டிகளில் விளையாடி 26 வெற்றிகள், 4தோல்விகள், 4 சமநிலை என 82 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

டோர்ட்மண்ட் அணி, 34போட்டிகளில் விளையாடி 21 வெற்றிகள், 7 தோல்விகள், 6 சமநிலை என 69 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. ஆர்.பி. லெய்ப்ஸிக் அணி, 34போட்டிகளில் விளையாடி 18 வெற்றிகள், 2 தோல்விகள், 12 சமநிலை என 66 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தது.


Add new comment

Or log in with...