கொரோனா நோய் அறிகுறிகளில் மேலும் மூன்று அறிகுறிகள் சேர்ப்பு

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளின் பட்டியலில் மேலும் 3 அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுப் போக்கு ஆகியனவும் அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே காய்ச்சல், இருமல், சுவாசத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி, மணம்-சுவை அறியும் திறன் இழத்தல், தொண்டை வலி ஆகியன கொரோனா அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

“இந்தப் பட்டியலில் அனைத்து சாத்தியமான நோய் அறிகுறிகளும் உள்ளடக்கப்படவில்லை.

கொவிட்-19 பற்றி எமக்கு மேலும் தெரியவரும்போது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்தப் பட்டியலை தொடர்ந்து புதுப்பிக்கும்” என்று அது குறிப்பிட்டுள்ளது.

அவற்றில் ஆளுக்கு தகுந்தாற்போன்று அறிகுறிகளும், நோயின் தாக்கமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தெரியும் என கூறப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...