கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 10 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (29) வெளியேறியுள்ளனர்.
இவர்களில் 05 பேர் IDH வைத்தியசாலையிலும், 04 பேர் தெல்தெனிய வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் முடிவுகளுக்கு அமைய, கொவிட்-19 வைரஸ் தொற்று அவர்களது உடலில் மேலும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 836ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் கொவிட்-19 தொற்றினால் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, அவர்களை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
Add new comment