கொவிட்-19; 785 கடற்படையினர் இதுவரை குணமடைவு

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 785ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்ட மேலும் 12 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து நேற்று (22) வெளியேறியுள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பன்னிரண்டு கடற்படையினரில் 09 பேர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலும், 02 பேர் IDH வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் வெலிக்கந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.  


Add new comment

Or log in with...