Monday, June 22, 2020 - 9:56am
இந்தியாவிலிருந்து விமானப் பயணிகள் 230 பேரை ஏற்றிய விமானமொன்று, இன்று (22) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கு வர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையர்களும், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள வெளிநாட்டுக் கப்பலில் பணியாற்றுவதற்கான இந்திய கப்பல் பணியாளர்களும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் இந்தியாவின் புதுடில்லியிலுள்ள விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததும் PCR பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Add new comment