யாழ். நாவற்குழி முந்நூறு வீட்டுத்திட்டப் பகுதியில் (13) இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது, 12 வயதுச் சிறுமி ஒருவர் கழுத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
அப்பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின்போது, உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தகராறின்போது குறுக்கே சென்ற துவாரகா (12) எனும் சிறுமியே இவ்வாறு கத்திக் குத்திற்கு இலக்கான நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(சரசாலை நிருபர் - த. சுபேசன்)
Add new comment