பிறந்து ஒரு நாளேயான சிசு புதைப்பு

நோர்வூட், ஜனபதய கொலனி பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் மானா தோப்புக்குள் பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று  புதைக்கப்பட்டுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

புதைக்கப்பட்ட சிசுவை மீட்க,  ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டதோடு, நீதவான் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு சிசுவின் சடலம் மீட்கப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, 26 வயதுடைய பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும், திருமணமாகாதவர் எனவும், இரண்டாவது முறையாக குழந்தையை பிரசவித்து  கொன்றமைக்கான தடயங்களும் வீட்டின் அருகாமையில் காணப்படுவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்)   
 


Add new comment

Or log in with...