Thursday, June 11, 2020 - 7:46pm
விளையாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கணக்காளர் பிரிவிலிருந்து 79 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியருக்கு விளக்கமறியல் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியரை, இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) முன்னிலைப்படுத்தியபோதே, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நேற்று (10) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, அவரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
Add new comment