கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 14 கடற்படையினர் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (10) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இக்கடற்படையினரில் 07 பேர் கடற்படை வைத்தியசாலையிலும், 03 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலும், இருவர் IDH வைத்தியசாலையிலும், ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் வெலிகந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 622ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் வைத்தியசாலைகளிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
Add new comment