குணமடைந்த கடற்படையினர் தொகை 563ஆக உயர்வு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 41 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (08) வெளியேறியுள்ளனர்.

இக்கடற்படையினரில் 35 பேர் கடற்படை வைத்தியசாலையிலும், 05 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் காத்தான்குடி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (08) வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 563ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மேலும் 14 நாட்களுக்கு  அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...