- மைத்துனர்களிடையே சண்டை
எம்பிலிப்பிட்டிய, மருதவான பிரதேசத்தில் நேற்றிரவு (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், படுகாயமடைந்த ஒருவர் எம்பிலிப்பிட்டிய அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளா ர்.
எம்பிலிப்பிட்டிய, மொரதவான பகுதியை சேர்ந்த கே. ரூபரத்ன (56) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காணித் தகராறு காரணமாக இரண்டு மைத்துனர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த பகைமையே இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபரை பொலிசார் கைது செய்ய முயற்சித்த போதிலும் அவர் இப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார் என, பொலிசார் தெரிவித்தனர்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)
Add new comment