வலையில் சிக்கிய மற்றுமொரு சிறுத்தை உயிரிழப்பு

- காணி உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை

நெலுவ பகுதியில் உயிரிழந்த சிறுத்தை ஒன்றின் சடலத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது கரும் சிறுத்தை அல்ல எனத் தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி ஒருவர், நெலுவ பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்த வலையில் சிக்கி இச்சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அறிந்த குறித்த பகுதிக்குரிய வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த இச்சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும்,  குறித்த தனியார் காணி உரிமையாளருக்கு எதிராக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு,  நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

அண்மையில் இவ்வாறான 03 அரிய வகை சிறுத்தைகள் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Add new comment

Or log in with...