குணமடைந்த கடற்படையினர் 388ஆக அதிகரிப்பு

- குணமடைந்த 22 கடற்படையினர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைப்பு

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 388ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கொவிட்-19 தொற்றுக் காரணமாக  வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 22 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (29)  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக,  கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 13 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், 05 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும், 02 பேர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலும், ஒருவர் IDH வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் கடற்படை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்றையதினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...