குணமடைந்த கடற்படையினர் 332ஆக உயர்வு

கொவிட் -19 தொற்றினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 19 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்றையதினம் (25) வெளியேறியுள்ளனர்.

அவர்களில்  09 பேர் கடற்படை வைத்தியசாலையிலும், 07 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும், 02 பேர் IDH வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் ஹோமாகம வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த  வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (25) வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 332ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய அவர்களை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
 


Add new comment

Or log in with...