றிஸ்வானின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த அனுஷா

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலை செய்ய முயற்சித்த யுவதியை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த ரிஷ்வானின் குடும்பத்தாருக்கு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் றிஸ்வானின் இல்லத்திற்குச் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

எத்தனையோ பிரச்சினைகள் ஆங்காங்கே நடக்கின்றன. பார்த்தும் பார்க்காததை போல செல்பவர்கள் சிலர், வேடிக்கை பார்ப்பவர்கள் சிலர், ஒரு சில நல்ல உள்ளங்கள் மட்டுமே மனித நேயத்துடன் செயற்படுவர்கள்.

“அதிலும் தன்னுயிரை நீத்து பிற உயிரை காப்பாற்றுபவர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள்.

சகோதரரின் குடும்பத்திற்கு முடிந்த உதவிகளை இப்பொழுது மட்டுமில்லாமல் தேவையான எல்லா சந்தர்ப்பங்களிலும் செய்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.

ஆனால், அவரின் இழப்பை நிச்சயமாக ஈடு செய்யவே முடியாது” என இதன்போது அனுஷா சந்திரசேகரன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

(தலவாக்கலை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...