பணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்

பணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்-Maligawatta Cash Distribution-3 Women Dead-8 More Injured

- மேலும் 8 பேர் வைத்தியாலையில் அனுமதி
- 6 பேர் கைது

மாளிகாவத்தை பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட பணப் பங்கீட்டின்போது ஏற்பட்ட நெரிசலில் 3 பெண்கள் மரணமடைந்துள்ளனர்.

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியிலுள்ள வீடொன்றிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பணப் பங்கீட்டின்போது திடீரென மக்கள் முண்டியடித்துள்ளனர். இதன்போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய 3 பெண்கள் மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்-Maligawatta Cash Distribution-3 Women Dead-8 More Injured

இந்நெரிசலில் சிக்கிய மேலும் 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்-Maligawatta Cash Distribution-3 Women Dead-8 More Injured

இதனையடுத்து ஜும்மா மஸ்ஜித் வீதியினூடாக கொழும்பிற்குள் நுழைதல் மற்றும் அங்கிருந்து வெளியேறுதல் ஆகியன தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


There is 1 Comment

Add new comment

Or log in with...