Tuesday, May 19, 2020 - 2:38pm
கொட்டதெனியாவ பிரதேசத்தில் பங்களாதேஷ் பிரஜை ஒருவர், கூரையிலிருந்து கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிலுள்ள உலோக உற்பத்தி தொழிற்சாலையிலேயே இச்சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
மின்னியலாளராக கடமையாற்றி வரும் குறித்த பங்களாதேஷ் பிரஜை, அத்தொழிற்சாலையின் கூரையின் மீதேறி திருத்த வேலையில் ஈடுபட்டிருந்தபோது, கீழே தவறி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து, திவுலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment