தெய்யந்தர நீதிமன்ற வழக்கு பொருள் களஞ்சியத்தில் தீ

தெய்யந்தர நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்கள் வைக்கும் களஞ்சியசாலையில்  இன்று (13) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தீ பரவியதால், வழக்கு பொருட்கள் வைக்கப்பட்ட களஞ்சியாலையில் இருந்த ஆவணங்கள் பல சேதமாகியுள்ளதாக, விசாரணையின்போது தெரியவந்துள்ளது. 

நீதிமன்ற  பாதுகாப்புக் கருதி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதோடு, இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 


Add new comment

Or log in with...