சிசுவின் சடலம் மீட்பு; தாய் கைது

மட்டக்களப்பு,  மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் பெண் சிசு ஒன்று நாய் இழுத்துச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அச்சிசுவை பிரசவித்த தாயை (39) நேற்று (10) மாலை கைது செய்துள்ளதாக, வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த பெண் 04 பிள்ளைகளின் தாயாராவார்.

கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர்,  நாய் ஒன்று இறந்த சிசுவின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கினார். இதையடுத்து குறித்த சிசுவின் தலை பகுதியை கொண்ட உடலை பொலிசார் மீட்டதுடன், அச்சிசுவை பிரசவித்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஆலையடிவேம்பு  சுழற்சி நிருபர் - என். ஹரன்)
 


Add new comment

Or log in with...