களுத்துறை பகுதிகளில் 10 ½ மணி நேர நீர் வெட்டு

களுத்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் நாளை (12) காலை 8.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பத்தரை மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தது.

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக, கெத்கேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் இடைநிறுத்தப்படுவதன் காரணமாக, நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வஸ்கடுவ, வாதுவை, பொத்துபிட்டிய, மொரந்துடுவ, களுத்துறை (வடக்கு, தெற்கு), கட்டுகுருந்த/நாகொட, பயாகல, பிலோமினாவத்தை, போம்புவல, மக்கொன, பேருவளை, களுவாமோதறை/மொரகல்ல, அளுத்கம, தர்காநகர், பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...