குளவி கொட்டியதில் 14 பேர் பாதிப்பு

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 ஆண் தொழிலாளர்கள்  பொகவந்தலாவை  வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்

இன்று (09)  மதியம் பொகவந்தலாவை, லொய்னோன் தோட்டத்தில் தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 14 ஆண் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

மரத்திலிருந்த குளவிக்கூடு உடைந்து அதிலிருந்த குளவிகள் கலைந்து வந்து வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது கொட்டியுள்ளன.

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர் - எம்.கிருஸ்ணா)


Add new comment

Or log in with...