நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த மேலும் 40 பாகிஸ்தான் பிரஜைகள் இன்று (04) காலை கொழும்பிலிருந்து பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1185 எனும் விமானத்தின் மூலம் இவர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக, கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற பாகிஸ்தானியர்களை காண்பதற்காக, உயர்ஸ்தானிகராலயத்தின் சார்பில் இரண்டாவது செயலாளர் (அரசியல்) ஆயிஷா அபூபக்கர் ஃபஹாட் வருகை தந்திருந்தார்.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயமானது, இலங்கை அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், இலங்கையில் சிக்கியிருந்த 50 பாகிஸ்தானியர்களை கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்ல வழி வகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment