Friday, May 1, 2020 - 6:53pm
திருகோணமலை, கிண்ணியா கண்டல் காடு கிராமத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்றையதினம் (01) குறித்த பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர், மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோதே, மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
கிண்ணியா, காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது பாருக் என்பவரே (42) இவ்வனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
(கிண்ணியா மத்திய நிருபர் - கியாஸ்)
Add new comment