Tuesday, April 28, 2020 - 11:24am
பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப்பெண்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த அறிகுறிகளாவன:
காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு (Fits), நெஞ்சு/வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல், உடல் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம்.
தரமான சேவையை வழங்கவும் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும் கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப்பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Add new comment