எதிர்வரும் 24ஆம் திகதி முதல் புகையிரத சேவைகளை பிரதேச மட்டத்தில் மாத்திரம் முன்னெடுக்கவுள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கண்டி - பொல்கஹவெல, கண்டி – மாத்தளை, கண்டி- நாவலப்பிட்டி, மஹவ – பொல்கஹவெல, பெலியத்த – இந்துருவ, காலி – இந்துருவ ஆகிய இடங்களுக்கு இடையில் மாத்திரம் புகையிரத சேவை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (22) கொலன்னாவ எண்ணெய் முனையத்திலிருந்து (Terminal) அநுராதபுரம் மற்றும் காலி வரை டீசல், பெற்றோல் ஏற்றிய இரு புகையிரதங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும், அத்துடன் கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் பேராதனை வரை எரிபொருள் ஏற்றிச் செல்லும் இரு புகையிரத சேவைகளை இன்றும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது
Add new comment