பூவரசங்குளத்தில் விபத்து; மதகுரு பலி

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில், இந்து மதகுரு ஓருவர் மரணமடைந்துள்ளதோடு,  இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.

பூவரசங்குளம் - செட்டிகுளம் வீதியில், மணியர்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிளொன்று வீதியில் திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் மணியர்குளம் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் கடமையாற்றும் 47 வயது மதிக்கத்தக்க இந்து மதகுரு  மரணமடைந்துள்ள அதேவேளை, இவ்விபத்தில் படுகாயமடைந்த  26 வயதுடைய இளைஞர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்

(வவுனியா விசேட நிருபர்)

 


Add new comment

Or log in with...