அம்பியூலன்ஸ் - பஸ் மோதி விபத்து; எழுவர் காயம்

பொரளை, சேனநாயக்க சந்தியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (10) பிற்பகல் தனியார் அம்பியூலன்ஸ் வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் மோதி இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 07 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...