கொழும்பில் 20 வருடங்களின் பின் வளி மாசடைதல் குறைந்துள்ளது

இருபது வருடங்களுக்கு பின்னர் கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம் குறைவடைந்துள்ளதாக தேசிய  கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாகனங்களின் போக்குவரத்து குறைந்தளவில் காணப்படுவதாகவும் இது, வளிமண்டலத்தில் தூசி துகளின்  அளவு குறைவடைவதைக் காட்டுவதாகவும் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...