மின்சார பட்டியலை செலுத்த ஏப்ரல் 30 வரை அவகாசம்

மின்சார பட்டியலை செலுத்த ஏப்ரல் 30 வரை அவகாசம்-Grace Period Until Apr 30 to Pay CEB Bill-Minister Mahinda Amaraweera

மின்சாரப் பட்டியல் கட்டணம் மற்றும் நிலுவைகளை செலுத்துவதற்று மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, நுகர்வோர் தமது மின்சாரப்பட்டியலின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு இச்சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆயினும் எக்காரணம் கொண்டும், மின்துண்டிக்கப்படமாட்டாது எனவும், அது தொடர்பில் மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...