Thursday, April 9, 2020 - 6:40pm
தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடவேண்டியதில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி செயலாளர், பீ.பீ ஜயசுந்தர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தேர்தல் தினத்தை தீர்மானிக்கும் அதிகாரம் மற்றும் பொறுப்பு ஆகியன தேர்தல்கள் திணைக்களத்திடம் காணப்படுவதால் இதனைத் தெரிவிப்பதாக அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்பதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புக்களில் தலையிட ஜனாதிபதி எண்ணவில்லை எனவும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள குறித்த கடிதம் வருமாறு...
PDF File:
Add new comment