கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த சீனாவின் வூஹான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 76 நாட்களாக முற்று முழுதாக வெளிநகர தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த சீனாவின் ஹுபே மாகாணத்தில் அமைந்த நகரமே வூஹான் நகரமாகும்.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஆயினும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தவாறே தங்களது கடமைகளை மேற்கொண்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
சீனாவில் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன.
சீனாவின் சான்ஜி மாகாணத்திலுள்ள, சியான் நகரில் உள்ள பாடசாலை இன்று திறக்கப்பட்டது. இதன்போது ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு முகக் கவசங்களை வழங்குவதை காணலாம்.
வூஹானில் திருமண பதிவுகளும் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், ஹுபே சென்ற 162 பேரைக் கொண்ட இறுதி மருத்துவக் குழுவும் சிச்சுவான் திரும்பியுள்ளது.
First batch of vehicles left Wuhan after the city lift 76-day travel ban in response to #COVID19 control. pic.twitter.com/qHUwZOIvSH
— Global Times (@globaltimesnews) April 7, 2020
முற்று முழுதாக மூடப்பட்ட வூஹானின் எல்லை பகுதியில் அமைந்த அதி வேக நெடுஞ்சாலைகள் மூலம் வாகனங்கள் முதன் முதலாக வெளியேறிச் செல்லும் காட்சியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இவர்களில் பெரும்பாலானோர், தேவைகளுக்காக வூஹான் வந்து அங்கு சிக்கிக் கொண்ட நபர்கள் தற்போது தங்களது சொந்த இடங்களை நோக்கிச் செல்கின்றனர்.
வூஹானிலிருந்து புறப்படத் தயாராகும் புகையிரதம்...
Add new comment