ஊரடங்கை மீறிய 1,815 பேர் 24 மணி நேரத்தில் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் நேற்று (07) காலை 6.00 மணி முதல் இன்று (08) காலை 6.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் 1,815 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 595 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 4,586 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
 


Add new comment

Or log in with...