மேலும் ஒருவர் குணமடைவு; 103 பேர் சிகிச்சையில்; 11 பேர் வீடு திரும்பினர்

மேலும் ஒருவர் குணமடைவு; 103 பேர் சிகிச்சையில்; 11 பேர் வீடு திரும்பினர்-1 More COVID19 Patient Recovered and Discharged

117 பேர் கண்காணிப்பில்

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் இன்று (29) பிற்பகல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி, COVID-19 நோயினால் பாதிக்கப்பட்ட 11 பேர் இது வரை குணமடைந்துள்ளதாக, இலங்கை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு மற்றும் இலங்கை சுகாதார மேம்பாட்டு திணைக்களம் ஆகியன அறிவித்துள்ளன.

இன்றையதினம் (29) இரு கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 115 பேரில் தற்போது 103 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றையதினம் (28) இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நோயாளி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடையாளம் - 115
குணமடைவு - 11

கண்காணிப்பில் - 117
சிகிச்சையில் - 103

மரணம் - 01

மரணமடைந்தவர்கள் (04)
இலங்கையில்
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில்
இலண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள்
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...