சமன் வகஆரச்சி காலமானார்

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் ஆசிரிய பீட பணிப்பாளரும் சகோதர பத்திரிகையான தினமினவின் முன்னாள் பிரதம ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் வகஆரச்சி நேற்று காலமானார்.

69 வயதான அன்னார் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அவரது பூதவுடல் நாளை 17ம் திகதி காலை 10.00 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளரான சமன் வகஆரச்சி யுக்திய பத்திரிகையின் விசேட ஆசிரியராகவும் லக்பிம பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அன்னாரது இறுதி கிரிகைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.


Add new comment

Or log in with...