கொரோனா; இத்தாலியில் பாடசாலைகளுக்கு பூட்டு

இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், அங்குள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (05) முதல் இம்மாதம் 15ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கான உத்தரவை இத்தாலிய அரசாங்கம் பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு அந்நாட்டில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 107 பேர் உயிரிழந்துள்ளதோடு 3,089 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

உலகம் பூராகவும் கொரோனா வைரஸ் காரணமாக 3,254 பேர் உயிரிழந்துள்ளதோடு, 95,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...