சில இடங்களில் நாளையும் அதிக வெப்பநிலை நிலவும் சாத்தியம்

வடமத்திய, மேல் மாகாணம், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் மற்றும் மன்னார், மொனராகலை மாவட்டங்களிலும் நாளையதினமும் (06) வெப்பநிலை குறிப்பிடும்படியாக அதிகரித்துக் காணப்படுமென, வளிமண்டலவியல் தெரிவித்தது.

இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களிலுள்ள பொதுமக்கள், சுகாதாரப் பிரிவினரால்  வெளியிடப்பட்ட விழிப்புணர்வுக்கு அமைய  அதிக நீரை அருந்துமாறும் அதிக களைப்படையக்கூடிய நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுமாறும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக முதியோர், நோயாளர்கள், சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...