ஆப்கானிஸ்தானில் பணியாற்றும்போது தங்கள் நாட்டு அதிரடிப் படை வீரர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 55 போர்க் குற்ற சம்பவங்கள் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருவதாக, அவுஸ்திரேலிய இராணுவ நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது சிறப்பு அதிரடிப் படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
அவற்றில், 55 சம்பவங்கள் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை, சண்டையில் ஈடுபடாத அல்லது சண்டையைக் கைவிட்டவர்களை அவுஸ்திரேலிய வீரர்கள் கொலை செய்ததாகக் கூறப்படுபவது தொடர்பானவையாகும்.
Add new comment