அதிபர், ஆசிரியர் போராட்டம்; பெலவத்தையில் வாகன நெரிசல்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக பத்தரமுல்லை, பெலவத்த பகுதியில் 174ஆம் இலக்க பஸ் மார்க்கத்திலான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று (26) காலை சுகவீன விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள முரண்பாடு உட்பட ஆறு அம்சக் கோரிக்கையை வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்  சங்கங்கள் தெரிவித்துள்ளன.


Add new comment

Or log in with...