தெஹிவளை பிரதேசத்தில் சுமார் 04 கிலோகிராம் ஹெரோயினுடன் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 26, 28 வயதுகளையுடைய மாலைதீவு பிரஜைகள் மூவர் அடங்குகின்றனர்.
நேற்றிரவு (24) குறித்த பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு இச்சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளுடன் 02 கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை இன்று (25) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Add new comment