பங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

பங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் அவர்களது நான்கு படகுகளையும் விடுவித்து அழைத்து வருவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் எல்லை தாண்டி பங்களாதேஷ் கடல் பரப்பினுள் நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 4மீன்பிடி படகுகள் பங்களாதேஷ் கடலோர காவற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் மற்றும் படகுகளின் உரிமையாளர்கள் அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் உடனடியாக கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், இது தொடர்பாக கலந்துரையாடியதுடன் மீனவர்களை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடடிவடிக்கை தொடர்பாக கலந்துரையாடினார்.


Add new comment

Or log in with...