இரு பஸ்கள் விபத்திற்குள்ளானதில் சிறுவன் பலி

தம்புள்ளை – மாத்தளை வீதியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் 11 வயதுச் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதோடு, 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த வீதியில் நாலந்தே பாடசாலைக்கு அருகில் இன்று (21) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளையிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த சிவனொளிபாதமலைக்கு சென்ற குழுவினரை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ் வண்டியொன்றும், எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் வண்டியொன்றும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் நாலந்தே, மாத்தளை மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...