துபாயிலிருந்து சிகரெட்டுக்களை கொண்டு வந்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (20) அதிகாலை சுங்க அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,138,000 ரூபா பெறுமதியான 114 கார்ட்டன்களில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுச் சிகரெட்டுக்கள் சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுங்கத் திணைக்களத்தின் வழமையான விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர் எச்சரிக்கப்பட்டு அவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு, சிகரெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்தது.
Add new comment