இறக்காமம் இக்றா இளைஞர் கழகத்திற்கு உதைபந்தாட்ட சீருடை வழங்கிவைப்பு

இறக்காமம் இக்றா இளைஞர் கழகத்தின் உதைபந்தாட்ட அணியினருக்கு உதைபந்தாட்ட சீருடை வழங்கிவைக்கும் நிகழ்வு இறக்காமம் குளக்கரை மைதானத்தில் கழகத்தலைவர் யூ.எல். றவூப் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இறக்காமம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தலைவரும் இறக்காம்ம் பிரதேச சபையின் உப தவிசாளருமான ஏ.எல்.நௌபர் மௌலவி கலந்து கொண்டு உதைபந்தாட்ட அணியினருக்கு சீருடைகளை வழங்கி வைத்தார்.

நிகழ்வின் போது இறக்காமம் இக்றா உதைபந்தாட்ட அணியினருக்கும் மருதமுனை கிறீன்மெக்ஸ் அணியினருக்கும் உதைபந்தாட்ட போட்டியும் இடம் பெற்றது இப் போட்டியில் இரு அணியினரும் மிகவும் சிறப்பாக விளையாடியதுடன் இரு அணியினரும் தலா ஒவ்வொரு கோல்களைப் போட்டு போட்டி சம நிலையில் முற்றுப் பெற்றது.

இப் போட்டிக்கு நடுவராக எம்.எச்.ஹுசைன் கடமையாற்றியதுடன் இந்த நிகழ்வின் போது பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் உதைபந்தாட்ட ரசிகர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

ஹிங்குறாணை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...