கார் – லொறி விபத்தில் பெண் பலி; ஐவர் காயம்

பாதெனிய – அநுராதபுர வீதியில் இம்பல்கொடயாகம குளத்தின் வான்கதவிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்திலிருந்து பாதெனிய பகுதிக்கு பயணித்த காரொன்று, எதிர்த்திசையில் லொறியுடன் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

இன்று (18) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில், காரில் பயணித்த சாரதி உட்பட 05 பேரும் லொறியின் சாரதியும் காயமடைந்ததை தொடர்ந்து அவர்கள் மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் காரில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிதோகம, மஹநெலிபெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்துள்ள ஏனையோர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் மஹவ பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Add new comment

Or log in with...