திருகோணமலை அரசாங்க அதிபர் கடமையேற்பு

திருகோணமலை அரசாங்க அதிபர் கடமையேற்பு-Trincomalee Government Agent Assumes Duty

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரம் I ஐ சேர்ந்த ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன தமது கடமைகளை இன்று மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்க முன்னர் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், கடற்றொழில் மற்றும் மீன்பிடி அமைச்சின் மேலதிக செயலாளர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகிய பதவிகளையும் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா, கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர் - எம்.எஸ். அப்துல் ஹலீம்)


Add new comment

Or log in with...