Friday, February 14, 2020 - 11:16am
சீனாவின் வூறான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தியத்தலாவையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் 33 பேரையும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நிலையத்திலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, அகுரேகொட இராணுவ தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Add new comment